என் கணவர் பார்த்திபனுடன் சேர்ந்து வாழனும்னு ஆசையா இருக்கு - மனம் திறந்த நடிகை சீதா

Parthiban Tamil Cinema Seetha Marriage Divorce
By Thahir May 08, 2023 05:35 AM GMT
Report

மகள் திருமணத்தின் கணவர் பார்த்திபனை பிரிந்து வாழும் நடிகை சீதா மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாராட்டுகளை பெற்ற பார்த்திபன் 

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் பார்த்திபன். அண்மையில் இவர் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

i-want-to-live-with-parthiban-actress-sita

மேலும் ஒத்த செருப்பு திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அப்படத்தை இயக்கியும் இருந்தார். இந்த படம் வெற்றியடைந்த நிலையில் பல்வேறு பாராட்டுகளையும் பெற்றது.

சீதா சினிமாவில் அறிமுகம் 

தற்போது அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். சீதா 1985 ஆம் ஆண்டு ஆண் பாவம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.

i-want-to-live-with-parthiban-actress-sita

1985 ஆம் ஆண்டு முதல் 1991 வரை நடித்து வந்த அவர் சிறிது காலம் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் மீண்டும் 2002 ஆம் ஆண்டு முதல் நடிக்கத் தொடங்கினார்.

நடிகை சீதா முந்தைய நாட்களில் முன்னணி நடிகையாக இருந்து வந்த அவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவான திரைப்படங்களில் நடித்திருந்தார்.

விவாகரத்து 

இந்த நிலையில் நடிகை சீதாவை திருமணம் செய்து கொண்ட பார்த்திபன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இதனால் தனது அம்மா குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

தனது கணவர் பார்த்திபனை விட்டு தனிமையில் வாழ்ந்து வரும் நடிகை சீதா தற்போது சின்னத்திரைகளில் நடித்து வருகிறார்.

i-want-to-live-with-parthiban-actress-sita

இந்த நிலையில் நடிகர் பார்த்திபனை பிரிந்து வாழ்ந்து வரும் அவர், சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பார்த்திபனுடன் வாழ ஆசைப்படும் சீதா 

இந்த 2வது திருமணத்திலும் கருத்து வேறுபாடு காரணமாக சதீஷை விட்டு பிரிந்தனர். இதையடுத்து நடிகை சீதா தனது மகள் திருமணத்தின் போது பார்த்திபனுடன் வாழ விருப்பம் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து சதீஷ் கூடவும் வாழாமல் தற்போது தன்னுடைய அம்மா வீட்டில் வாழ்ந்து வரு நடிகை சீதா தற்போது தன் முன்னாள் கணவர் பார்த்திபனுடன் எப்படியாவது சேர்ந்து வாழ ஆசைபடுகிறார், இப்போது நடிகை சீதா வெளிப்படையாகவே பார்த்திபனிடம் கேட்டு வருகிறார்.

அதற்கு பார்த்திபன் பிரிந்தது பிரிந்ததுதான் இனி ஓட்டு வாழ்வதற்கு ஒன்றும் இல்லை எனக்கும் இதில் விருப்பம் கிடையாது என்று தன்னுடைய உரையை முடித்துக்கொண்டாராம்.