எனக்கு அந்த பழக்கம் இருக்கு - வெளிப்படையாக பேசிய கவர்ச்சி நடிகை

Shakeela
By Thahir Nov 14, 2023 12:50 PM GMT
Report

கவர்ச்சி நடிகையாக அறிமுகம்

90களில் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் நடிகை ஷகீலா. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 250-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக மலையாள திரையுலகில் நடிகை ஷகீலா கொடிகட்டி பறந்தார்.

எனக்கு அந்த பழக்கம் இருக்கு - வெளிப்படையாக பேசிய கவர்ச்சி நடிகை | I Have That Habit The Outspoken Glamor Actress

கேரளாவில் ஷகீலாவின் படம் ரிலீஸானாது தங்களின் படங்கள் அடிவாங்குமோ என்று மலையாள முன்னணி நடிகர்களே பயந்த காலம் இருந்தது. அந்தளவுக்கு ஷகீலா படங்களுக்கு மிகப்பெரிய வரவெற்பு கிடைத்தது.

பின்னர் பெரிய திரையில் கவர்ச்சி வேடஙக்ளில் நடிப்பதை நிறுத்திய ஷகீலா, தற்போது சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்பு 

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தான் ஒரு கவர்ச்சி நடிகை என்ற முத்திரையை கிழித்தெறிந்தார். அந்த நிகழ்ச்சியில் ஃபைனல்ஸ் வரை சென்ற அவர் 2- இடம் பிடித்திருந்தார்.

சமீபத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், சில வாரங்களிலேயே வெளியேற்றபப்ட்டார். மேலும் யூ டியூப் சேனல்களில் பல சர்ச்சைக்குரிய நபர்களை பேட்டி எடுத்து வருகிறார்.

தற்போது 49 வயதாகும் ஷகிலாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் தான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து நடிகை ஷகிலா பேசி உள்ளார்.

எனக்கு அந்த பழக்கம் இருக்கு 

இதுகுறித்து பேசிய அவர் “ நான் செய்த தவறுகளை இல்லை என்று சொல்வதால் என்ன நடந்துவிட போகிறது. எனது தவறுகளை ஒப்புக்கொள்ள எனக்கு பயமில்லை.

எனக்கு அந்த பழக்கம் இருக்கு - வெளிப்படையாக பேசிய கவர்ச்சி நடிகை | I Have That Habit The Outspoken Glamor Actress

நான் 13 வயதில் இருந்தே சம்பாதிக்கிறேன் என்பதால் இறுமாப்பு வந்துவிட்டது. இதன் காரணமாகவே எனக்கு இன்னொரு துணை வேண்டாம் என்று முடிவெடுத்தேன்.

அனைத்திற்கும் மேலாக எனக்கு மது மற்றும் புகைப்பழக்கம் உள்ளது. முதலில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த பழக்கத்திற்கு நான் அடிமையாகிவிட்டேன்.

தினமும் மது இருந்தால் தான் தூக்கம் வரும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். இப்படி இந்த பழக்கம் இருக்கும் போது, இன்னொரு நபரின் வாழ்க்கையையும், மகிழ்ச்சியையும் கெடுத்து திருமணம் செய்ய வேண்டுமா என நினைத்தேன். அதனால் தான் நான் திருமணம் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்தேன்” என்று தெரிவித்தார்.