கூட்டணியில் இருந்து போறவங்க போகட்டும்...என் முடிவ சொல்லியாச்சு - அண்ணாமலை
கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும் என நிர்வாகிகளிடத்தில் அண்ணாமலை பேசியுள்ளார்.
பாஜக கூட்டம்
அதிமுக பாஜக கூட்டணி முறிந்த நிலையில், அடுத்த நடவடிக்கைகளில் அதிமுகவும் பாஜகவும் மும்முரம் காட்டி வருகின்றன. வரும் நாடாளுமன்ற தேர்தல் மத்தியில் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தான் தற்போது மாநிலத்திலும் அதிமுக இல்லாத நிலையில் பாஜகவிற்கு ஏற்பட்டு இருக்கின்றது.
முன்னதாக அண்ணாமலை மாநிலத்தில் இல்லாத சூழலில் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றதை தொடர்ந்து இன்று மீண்டும் கூட்டம் நடைப்பெட்டது. புதிய கூட்டணி அமைப்பது, தேர்தல் நடவடிக்கைகளை பற்றி விவாதிப்பது போன்ற விஷயங்களை குறித்து ஆலோசிக்க இன்று சென்னையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
எனது முடிவை கூறிவிட்டேன்
இந்த கூட்டத்தில் சற்று தாமதமாக அண்ணாமலை வந்தடைந்து கூட்டத்தில் பங்கேற்று கொண்டார். கூட்டத்தில் நிர்வாகிகளிடத்தில் பேசிய அவர், அனைத்து பூத்களிலும் பெண்களை சேர்க்கவேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கிய அவர், அடுத்த 7 மாதங்களில் திமுக அரசு மீதான விமர்சனங்களை தீவிர படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் கூட்டணி குறித்து பேசிய அண்ணாமலை, கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும் என்றும் அது அவர்களது விருப்பம் என தெரிவித்து, கூட்டணி பிரச்சனை தொடர்பாக தனது நிலைப்பாட்டை பாஜக மேலிடத்தில் கூறிவிட்டேன் என கூறி, டெல்லியிலுள்ள பாஜக மேலிட தலைவர்கள் தான் இனி கூட்டணி பற்றி முடிவெடுப்பார்கள் என்றார்.