நடிகை சம்மதித்ததாலே உடலுறவு கொண்டேன் - பிரபல நடிகர் பரபரப்பு வாக்குமூலம்..!

Kerala
By Thahir May 26, 2022 11:24 PM GMT
Report

நடிகை சம்மதித்ததாலே உடலுறவு கொண்டதாக பிரபல மலையாள நடிகர் விஜய் பாபு தெரிவித்துள்ளார்.

ஃபிரைவேட பிலிம் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரபலமான படங்களை தயாரித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் வஜய் பாபு.

நடிகை சம்மதித்ததாலே உடலுறவு கொண்டேன் - பிரபல நடிகர் பரபரப்பு வாக்குமூலம்..! | I Had Sex Because The Actress Agreed Famous Actor

இவர் மலையாளத்தில் ஹோம் ஆகிய படங்களை தயாரித்து நடித்துள்ளார். இவர் மீது கடந்த மாதம் 22 ஆம் தேதி கோழிக்கோடு பகுதியயைச் சேர்ந்த ஒருவர் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம் பெண் ஒருவரை விஜய் பாபு தனது குடியிருப்பில் விஜய் பாபு பலமுறை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

புகாரின் பேரில் பாலியல் பலாத்காரம்,உடல் உபாதை விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் எர்ணாகுளம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு விஜய் பாபு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர் இந்தியாவில் இருக்கிறாரா? என கேள்வி எழுப்பினர். விஜய் பாபுவின் வழக்கறிஞர் துபாய் சென்று விட்டதாகவும்,பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு விட்டதால் இந்தியா திரும்ப முடியவில்லை என்று கூறினார்.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் இந்தியா வரட்டும் அதன் பிறகு முன் ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தலாம் என நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கில் விஜய் பாபு புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.அதில் அவர் புகார் அளித்த நடிகையுடன் தனக்கு நட்பு இருப்பதாகவும்,அவர் சம்மதம் தெரிவித்ததாலே உடலுறவு கொண்டதாகவும்,

வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14ம் தேதி மரைன் டிரைவில் உள்ள லிங்க் ஹொரைசன் பிளாட்டுக்கு நடிகை வந்தாகவும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில் அவர் கூறியுள்ளார்.