அண்ணாமலையின் கருத்து பற்றியெல்லாம் கவலையில்லை - செல்லூர் ராஜு
தன்னை பற்றி அண்ணாமலை கூறும் கருத்துக்களை பற்றியெல்லாம் தனக்கு கவலையில்லை என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுக மாநாடு
அதிமுகவின் மாநில மாநாடு வரும் 20- ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. எடப்பாடி பழனிசாமி கழகத்தின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் மாநில மாநாடு என்பதால் இதில் கூடுதல் கவனம் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இன்று அந்த மாநாட்டிற்கான பத்திரிகையை செல்லூர் ராஜு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து வழிபட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இப்படியான ஒரு மாநாடு எந்த இடத்திலும் நடந்திரவில்லையே என்ற அளவிற்கு இந்த மாநாட்டை நடத்தி முடித்திட வேண்டுமென்பதே தற்போது தங்களின் குறிக்கோள் என தெரிவித்தார்.
கவலை இல்லை
அப்போது செய்தியாளர்கள் செல்லூர் ராஜூவை அண்ணாமலை விமர்சனம் செய்த்தை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு தனக்கு அண்ணாமலையின் கருத்து குறித்து எந்த ஒரு கவலையும் இல்லை என குறிப்பிட்டு, தனது நோக்கமெல்லாம் மாநாட்டை பற்றி மட்டுமே என தெரிவித்தார்.
மேலும் செந்தில் பாலாஜி குறித்து பேசிய அவர், செந்தில் பாலாஜி வாய் திறந்தால், திமுகவின் பல அமைச்சர்கள் மாட்டிக்கொள்வார்கள் என்ற பயத்தின் காரணமாக தற்போது பலரும் தூக்கமின்று தவித்து வருவது விமர்சனம் செய்தார்.