இந்தியில் பேசினா புரியாது...கூச்சலிட்ட பாஜக..அலறவிட்ட கனிமொழி
இன்று நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசித்துவங்கிய போது, பாஜகவின் உறுப்பினர்கள் கத்தி கூச்சலிட்ட நிலையில், இந்தியில் பேசினால் தனக்கு புரியாது என கனிமொழி பதிலடி கொடுத்தார்.
கனிமொழி உரை
மக்களவையில் இன்று கனிமொழி எம்.பி மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பேச துவங்குவதற்கு முன்பே பாஜகவின் உறுப்பினரகள் கத்தி கூச்சலிட்டனர். அதற்கு இந்தியில் பேசினால் தனக்கு புரியாது என கனிமொழி பதிலடி கொடுத்தார்.
பிறகு பேசிய அவர், 1921-ஆம் ஆண்டில் நாட்டிலேயே முதல் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்து மசோதா நிறைவேற்றியது நீதிக்கட்சி தான் என கூறினார்.
1927-ஆம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து தான் தமிழகத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என கூறிய அவர், அது முடித்து 100 ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், இன்னும் பெண்களுக்கான இடஒதுக்கீடு நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
காலதாமதமான முடிவு
1996-ஆம் ஆண்டிலேயே இந்த மசோதா திமுகவின் துணையுடன் கொண்டுவரப்பட்டது என நினைவூட்டிய கனிமொழி, அதனை 2010-இல் ராஜ்யசபாவில் ஒப்புதல் வழங்கியது அப்போதைய UPI அரசு தான் கொண்டுவந்தது என விளக்கமளித்தார்.
மேலும், நாடாளுமன்றத்தில் தான் பல முறை கேள்வி எழுப்பியும் அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என குறிப்பிட்டு, இது மிகவும் காலதாமதமான முடிவு என கூறினார்.
இந்த மசோதா குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் கூட தெரியப்படுத்தாமல், திடீரென தங்கள் முன்னிருக்கும் காணியில் இது குறித்தான தகவல்கள் வந்தது என குற்றம்சாட்டிய கனிமொழி, எப்போது இந்த மசோதா அமல்படுத்தப்படும் என கேள்வி எழுப்பினார்.