முதலமைச்சர் அனுமதி இல்லாமல் நான் பேச முடியாது - அமைச்சர் கே.என்.நேரு..!

Tamil nadu K. N. Nehru
By Thahir Apr 23, 2022 07:30 AM GMT
Report

தூர்வாறுதல் பணிகள் குறித்த கேள்வியை மட்டும் கேளுங்கள் - அரசியல் மற்றும் விமர்சனங்கள் சார்ந்த கேள்விகளை கேட்காதீர்கள் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி வயலூர் சாலையில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் அருகே நீர்வளத் துறையின் சார்பில் ஆற்று பாதுகாப்புக் கோட்டம் மற்றும் அரியாறு வடிநிலக் கோட்டங்களுக்குட்பட்ட ஆறுகள்,ஏரிகள், கால்வாயை தூர்வாருதல் என ரூபாய் 18.75 கோடி மதிப்பில் 90 பணிகளை துவக்கி வைக்கும் வகையில் ஆறு தூர்வாரும் பணியை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு.

காவிரி டெல்டா மாவட்டங்களில் 80 கோடி மதீப்பிட்டில் 4964 கிலோ மீட்டரில் தூர்வாருதல் உள்ளிட்ட 683 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 10.06.2022க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.

கடைமடை வரை தண்ணீர் செல்வது உறுதி செய்யப்படும். உய்யகொண்டான் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவது தொடர்பாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கேள்வி எழுப்பியது தொடர்பாக,

நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்கள் திருச்சிக்கு நேரில் வந்து 12 ஆண்டுகளாக முடிவு பெறாமல் உள்ள அரிஸ்டோ மேம்பாலம், முடிக்கப்படாமல் உள்ள பல்வேறு சாலை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை துவக்க வழி வகை செய்ய உள்ளனர்.

காவிரி பாலத்தை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள பழைய பாலத்தை புனரமைத்து வலுப்படுத்த உள்ளோம். மேலும் புதிய பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளோம்.

காவிரி ஆற்றில் சாக்கடை நிரந்தரமாக கலக்காமல் இருக்க கழிவுநீர் மறுசுழற்சி திட்டத்தின் வாயிலாக பணிகளை துவக்க உள்ளோம் - ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றார்.