நான் தான் ரஜினி மகளோட சொத்துக்கு பினாமி : கணவருக்கே விபூதி அடித்த ஈஸ்வரி

Aishwarya
By Irumporai Mar 23, 2023 03:48 PM GMT
Report

நடிகர் ரஜினி காந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடியதாக கைது செய்யப்பட்ட பெண் பணியாளர் தன்னை ஐஸ்வர்யாவின் பினாமி என்று கூறிவந்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

 திருட்டு வழக்கு  

ட்டில் வசித்து வருகிறார்.ஐஸ்வர்யாவின் 60 பவுன் தங்க வைர நகைகள் திருட்டு போன வழக்கில் பணிப் பெண் ஈஸ்வரி ,ஓட்டுநர் வெங்கடேஷ் ஆகிய இருவரும் போலிசாரல் கைது செய்யப்பட்டு , திருட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருக்கின்றது, நகைகளை விற்று சோழிங்கநல்லூரில் வீடு முதல் தொடங்கி ,தனது மூத்த மக்களுக்கு திருமணம் ,இரண்டாவது மக்களுக்கு மளிகைக்கடை தனது கணவர் அங்கமுத்துவுக்கு அதிகமுதலீட்டில் காய் கறி கடை , 20 லட்சம் நகையை விற்று தந்த ஓட்டுநர் வெங்கடேஸ்க்கு 9 லட்சம் ,தனது கனவர் பெயரில் 350 கிராம் தங்க நகையை வங்கியில் அடமானம் வைத்தது வரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரிமாஸ்டர் பிளான் 

ஈஸ்வரி,கணவர் அங்க முத்துவிடம் போலீசார் விசாரணையின் போது ,சோழிங்கநல்லூரில் வீடு வாங்க இவ்வளவு பணம் ஏது என்று தான் ஈஸ்வரியிடம் கேட்டதற்கு , ஐஸ்வர்யா ரஜினிகாந்த் , தனது பெயரில் பினாமியாக வீடு வாங்கியதாகவும் வெளி உலகத்திற்கு இது நமது வீடு ,. உண்மையில் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு சொந்தமானது எனக் கூறி வாயை அடைத்ததாக கூறினார் , இது குறித்து யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு சந்தேகம் இல்லாத வண்ணம் ஈஸ்வரி செயல்பட்டது தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணை 

புகாரில் இருப்பதை விட அதிக படியான நகைகள் கைப்பற்றியதால் எவ்வளவு நகைகளை திருடியிருப்பார்கள் ,ஈஸ்வர் 18 வருடங்களாக ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்து வருகிறார் , வெங்கடேசன் 10 வருடங்களாக ஓட்டுனராகபணியில் உள்ளார்கள் , இதனை வருடங்களாக சந்தேகம் வராமல் திருடியது எப்படி ,ரஜினி ,தனுஷ் வீடுகளில் வேறு எதாவது திருடு போய்யுள்ளதா ? என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்