ஐபிஎல் 2022, 28-வது போட்டி - பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இன்று நடைபெறும் 28-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
#SRH have won the toss and they will bowl first against #PBKS.
— IndianPremierLeague (@IPL) April 17, 2022
Live - https://t.co/WC7JjTqlLB #PBKSvSRH #TATAIPL pic.twitter.com/RjoZ8w6KEL
பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய போட்டியில் 3 வெற்றியும் (பெங்களூரு, சென்னை, மும்பை அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (கொல்கத்தா, குஜராத் அணிகளிடம்) 6 புள்ளிகள் பெற்றுள்ளது.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் முதல் இரு ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோ அணிகளிடம் தோல்வியை சந்தித்தது.
அதன் பிறகு சென்னை, குஜராத், கொல்கத்தா அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி எழுச்சி கண்டுள்ளது.
இந்த நிலையில் இரண்டு அணிகளும் தற்போது களம் காண்கின்றன. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்றுள்ள ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.