இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் - நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

Instagram Telangana Hyderabad
By Karthikraja Sep 09, 2024 02:30 PM GMT
Report

இன்ஸ்டாகிராம் நண்பர் நேரில் சந்திக்க வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பழக்கம்

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் பைன்சாவை சேர்ந்த மைனர் பெண் கல்லூரி முதலாமாண்டு ஆண்டு படித்து வருகிறார். 

instagram

இவருக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில வருடங்களாக அதே பெண்ணுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நட்பு ரீதியாக பேசி வந்துள்ளார் அந்த இளைஞர்.

பாலியியல் வன்கொடுமை

இதன் பின் நேரில் சந்திக்கலாம் என ஐதராபாத்திற்கு வருமாறு அந்த பெண்ணை அழைத்துள்ளார். அதன் பின்னர் நாராயணகூடாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை பதிவு செய்து தனது சுயரூபத்தை காட்டியுள்ளார். 

hyderbad girl locked 20 days

தன்னை நம்பி வந்த பெண்ணை கடந்த 20 நாட்களாக ஹோட்டல் அறையில் வைத்து மிரட்டி பாலியியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை அறையை பூட்டி விட்டு வெளியே சென்றபோது ஓட்டல் ஊழியரின் செல்போனில் இருந்து தனது பெற்றோருக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார்.

மேலும் வாட்ஸ்அப் மூலம் தற்போதைய இருப்பிடத்தைப் பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

கைது

விரைந்து செயல்பட்ட போலீசார், வாட்ஸ்அப் மூலம் கிடைத்த இருப்பிடத்தை வைத்து நாராயணகுடாவில் உள்ள ஹோட்டலுக்கு சென்று சிறுமியை மீட்டனர்.பெற்றோரை பார்த்ததும் சிறுமி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு கதறினார்.

இது குறித்து நாராயணகுடா காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.