பஜ்ஜி சாப்பிட அவசரம்; சைரன் ஒலித்தபடி சென்ற ஆம்புலன்ஸ் - டிஜிபி எச்சரிக்கை!
பஜ்ஜி சாப்பிட சைரன் ஒலித்தபடி அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ் வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வேகமாக சென்ற ஆம்புலன்ஸ்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு போக்குவரத்து நெரிசல் அதிகமான பஷீபாக் சிக்னலில் சைரன் ஒலித்தபடி ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாகச் சென்றுள்ளது.
அவசர சிகிச்சைக்காக நோயாளி உள்ளே இருப்பார்கள் என்ற எண்ணத்தில் சிக்னலில் நின்ற போக்குவரத்து காவலர் ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். சிக்னலை தாண்டியதும் 100 மீட்டர் தொலைவில் ஆம்புலன்ஸ் நின்றுள்ளது.
இதனை கண்ட காவலர் ஆம்புலன்ஸ் அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது ஆம்புலன்ஸின் ஓட்டுநர், இரண்டு செவிலியர்கள் மற்றும் சில மருத்துவமனை ஊழியர்களும் அங்குள்ள ஒரு கடையில் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
இதைப்பற்றி காவலர் விசாரித்தபோது ஆம்புலன்ஸில் நோயாளி இல்லாததையும் போக்கு வரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சைரன் போட்டதையும் உறுதி செய்துள்ளார்.
டிஜிபி எச்சரிக்கை
இதையடுத்து, போக்கு வரத்து காவலர் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை எச்சரித்து போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ரூ.1000 அபராதம் விதித்துள்ளார்.
பின்னர் ஆம்புலன்ஸ் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் காவலரின் சட்டை கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தெலங்கானா டிஜிபி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
#TelanganaPolice urges responsible use of ambulance services, citing misuse of sirens. Genuine emergencies require activating sirens for swift and safe passage. Strict action against abusers is advised.
— Anjani Kumar IPS (@Anjanikumar_IPS) July 11, 2023
Together, we can enhance emergency response and community safety. pic.twitter.com/TuRkMeQ3zN