மனைவியின் பிரிவை தாங்காமல் தீ குளித்து உயிரிழந்த கணவன்!

Sucide Husband Trichy
By Thahir Jul 19, 2021 09:06 AM GMT
Report

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த பேன்சி கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மனைவியின் பிரிவை தாங்காமல் தீ குளித்து உயிரிழந்த கணவன்! | Husband Suicide Trichy

திருச்சி மாவட்டம் துறையூர் காந்தி நகரில் வசித்து வந்தவர் கோகுல மூர்த்தி. இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இந்த நிலையில், கோகுல மூர்த்தியின், மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். கோகுலமூர்த்தி சேர்ந்து வாழ வரும்படி பலமுறை அழைத்தும், அவர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோகுல மூர்த்தி, நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றியதால் அவர் அலறி துடிக்கவே, அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவர் மீது எரிந்த தீயை அணைத்தனர். ஆனால், பலத்த தீக்காயமடைந்த கோகுல மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்தபகுதி மக்கள் துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்வம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.