மாமியார் வீட்டு முன்பு கை விலங்குடன் டீ கடை நடத்தும் நபர் - என்ன காரணம்?

Viral Video Rajasthan
By Karthikraja Jun 15, 2025 10:35 AM GMT
Report

இளைஞர் ஒருவர் தனது மாமியார் வீட்டு முன்பு கை விலங்குடன் டீ கடை நடத்தும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வரதட்சிணை புகார்

மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச்சைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தகாத் என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் பாரனில் உள்ள அன்டா பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் இனைந்து தேனீ வளர்ப்பு தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது மனைவி கணவரை பிரிந்து தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். 

‘498A tea shop against dowry

இதனையடுத்து, தனது கணவர் மீது வரதட்சிணை புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு காரணமாக, கிருஷ்ண குமார் அடிக்கடி 220 கிமீ பயணம் செய்து ராஜஸ்தான் செல்ல வேண்டியிருந்தது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், போலி வரதட்சிணை புகாருக்கு எதிராக புதிய வடிவிலான போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

கை விலங்குடன் டீக்கடை

இதன்படி, தனது மாமியார் வீட்டு முன்பு, ‘498A’ என்ற பெயரில் டீக்கடை ஒன்றை தொடங்கியுள்ளார். அதாவது வரதட்சணை கொடுமை குற்றப்பிரிவு ஐபிசி 498ஏ என்பதை குறிக்கும் வகையில் அந்த பெயரை வைத்துள்ளார். 

அங்கு அவர் கைவிலங்கு அணிந்து தேநீர் தயாரிப்பதுதான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. “எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்” என்பது போன்ற வாசகங்களையும் அந்த கடையில் அமைத்துள்ளார்.

இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், கிருஷ்ணகுமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்த கடைக்கு கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெங்களூருவில், மனைவியின் போலியான வரதட்சணை புகார் காரணமாக கணவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.