விவகாரத்திற்கு மறுப்பு...கணவருக்கு சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி
மனைவிக்கு விவாகரத்து வழங்க மறுத்ததத்துடன், அவரை கொடுமைப்படுத்திய கணவருக்கு 6 வாரங்கள் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
விவாகரத்துக்கு மறுப்பு
சீனாவை சேர்ந்த 47 வயதான நபர், சிங்கப்பூரில் குடியேறி அந்நாட்டின் நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ளார். திருமணமான அவரது மனைவிக்கும் 47 வயதாகும் நிலையில், இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்தே தம்பதிகளுக்கு மத்தியில் நல்லுறவு இல்லை.
அதன் காரணமாக அவரது மனைவி நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால் தனது மனைவிக்கு விவகாரத்து வழங்காத முதலில் மறுத்த அவர்,
நீதிமன்றம் அதிரடி
பின்னர் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு குடும்ப ரீதியிலான கொடுமைகளை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், வேறு ஒரு பெண்ணுடனும் தொடர்பில் இருந்த அவர், சிங்கப்பூர் நாட்டின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தரவுகளை மீறிய காரணத்தினாலும்,
மனைவியுடன் நல்லுறவில் இல்லாத காரணத்தினாலும், தாமாக முன்வந்து தனது குற்றத்தை போன்ற 3 குற்றச்சாட்டுக்களில் அவருக்கு 6 வாரங்கள் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நாட்டின் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.