மனைவி, 2 குழந்தைகளை கொன்ற கொடூர கணவன் - பின்னணி என்ன?
மனைவியுடன் மகள்களையும், தந்தை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறு
விருதுநகர், திருவிளந்தால்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவேலு (47). விவசாயத் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 5 மற்றும் 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் தகராறு முற்றவே,
கணவன் வெறிச்செயல்
ஆத்திரத்தில் சுந்தரவேலு தனது மனைவி, மகள்கள் 3 பேரையும் வீ்ட்டில் இருந்த அரிவாள் எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் 3 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
தொடர்ந்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி கண்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.