நல்லவேளை தப்பிச்சுட்டேன் - மனைவிக்கு காதலருடன் திருமணம் செய்துவைத்த கணவன்
கணவர், தனது மனைவியை காதலருடன் சேர்த்துவைத்துள்ளார்.
மனைவியின் ஆசை
உத்தரப்பிரதேசம், ஜான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரீட்டா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஆனால் ரீட்டா, யஷ்வந்த என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
கல்யாணத்திற்குப் பிறகும் அவர் நினைவில் இருந்துள்ளார். இந்நிலையில் ரீட்டா தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பியபோது யஷ்வந்தோடு மீண்டும் பழகி வந்துள்ளார்.
கணவரின் செயல்
இதனை அறிந்த கணவர் அரவிந்த், ரீட்டாவை அழைக்கச் சென்றுள்ளார். ஆனால், அவர் மறுத்துவிட்டார். இதனால், அரவிந்த் அவர்கள் இருவருக்கும் ஒரு கோயிலில் திருமணம் செய்துவைத்து அந்த ஜோடியைச் சேர்த்துவைத்தார்.
Arvind from Jaunpur just pulled off a move directly from Bollywood
— Woke Eminent (@WokePandemic) June 18, 2025
His wife Rita was playing love-love with her boyfriend Yashwant behind his back.
Did Arvind whine? NO!
This asli mard marched her to a temple, handed Yashwant the sindoor, and said, Bhai, ab tu hi sambhal!… pic.twitter.com/0LwCFUy77L
இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. “இது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை. காவல்துறையினரால் நீல டிரம்மில் அவரைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, அவர் சரியான முடிவை எடுத்துள்ளார்" என பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.