2 மனைவிகளின் தொந்தரவு தாங்காமல் கணவன் தப்பியோட்டம்

Andhra Pradesh Marriage
By Thahir Sep 29, 2022 08:01 PM GMT
Report

ஆந்திராவில் 2 மனைவிகளின் தொந்தரவு தாங்காமல் கணவர் கல்யாண் என்பவர் தப்பியோடினார்.

கணவனுடன் முன்னாள் காதலியை சேர்த்து வைத்த மனைவி 

ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண். இவர் டிக்டாக்கில் வீடியோக்களை பதிவேற்றி வந்த நிலையில் பிரபலமானார்.

கல்யாணுக்கும் விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் நட்பு ஏற்பட்டுள்ளது. நட்பு நாளடைவில் காதலாக மாறியதை அடுத்து இருவரும் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு வந்தனர்.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்திற்கு பிறகு விமலா சோகமாக இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து கல்யாண் மனைவி விமலாவிடம் ஏன் சோகமாய் இருக்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த அவர், நித்யஸ்ரீ என்ற பெண் சந்தித்ததாகக் கூறியுள்ளார்.

இன்ஸ்டாவில் நித்யஸ்ரீ என்பவரை கல்யாண் விரும்பியது விமலாவுக்கு தெரியவந்துள்ளது. விமலாவிடம் நித்யஸ்ரீ தன்னை கல்யாணுடன் கல்யாணம் செய்து வைக்குமாறு கெஞ்சியுள்ளார்.

திருமணம் செய்து வைக்க முடிவு செய்த விமலா மூன்று பேரும் சேர்ந்து தான் வாழ வேண்டும் என்று நித்யஸ்ரீயிடம் கூறியதை அடுத்து தான் திருமணம் செய்து வைத்துள்ளார்.

2 மனைவிகளின் தொந்தரவு தாங்காமல் கணவன் தப்பியோட்டம் | Husband Escapes Without Bearing Wife S Trouble

கணவன் தப்பியோட்டம் 

இதையடுத்து அனைத்து செய்திகளிலும் முன்னாள் காதலியுடன் திருமணம் செய்து வைத்த மனைவி என்று செய்திகள் வெளியாகின.

மேலும் கல்யாணின் இரண்டாம் திருமணம் குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இரண்டு மனைவிகளின் தொந்தரவை தாங்க முடியாமல் கல்யாண் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.