மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து வெளியாட்களை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்!

Sexual harassment France Crime
By Sumathi Sep 15, 2024 11:07 AM GMT
Report

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து, கணவன் வெளியாட்களை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

பிரான்ஸைச் சேர்ந்தவர் கிஸ்செல் பெலிகோட்(72). இவருடைய கணவர் டாமினிக் பெலிகோட்(71). இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து வெளியாட்களை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்! | Husband Drugged His Wife Forced Outsiders To Rape

இந்நிலையில், கிஸ்செல்லை கணவர் டாமினிக் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக அவருக்கே தெரியாமல் சித்ரவதை செய்துள்ளார். மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து படுக்க வைத்து, வெளியாட்களை அழைத்து வந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்துள்ளார்.

36 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை - வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

36 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை - வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

கணவர் வெறிச்செயல்

இதனை புகைப்படங்களாகவும் எடுத்து வைத்திருந்துள்ளார். இதையறிந்த மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, இதுதொடர்பான வழக்கை கிஸ்செல் தொடர்ந்துள்ளார்.

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து வெளியாட்களை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்! | Husband Drugged His Wife Forced Outsiders To Rape

அதில், பல கணவர் டாமினிக்காலும் மற்றும் 90-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் வெளியாட்களும் இடம் பெற்று உள்ளனர் என விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்தில், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க கூடும். டாமினிக் உள்ளிட்ட 18 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.