கிணற்றில் குதித்த மனைவி - காப்பாற்ற முயன்ற கணவன் பலி

By Petchi Avudaiappan Jan 08, 2022 08:20 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

நாக்பூரில் தற்கொலைக்கு முய்ன்ற மனைவியை காப்பாற்ற சென்ற கணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாக்பூரில் உள்ள ஒரு வீட்டில் சரியான நேரத்தில் உணவை சமைக்காததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் காரணமாக மனைவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து மனைவியை காப்பாற்ற அந்த கணவனும் கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் அந்த கணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆனால் கிணற்றில் இருந்து குழாயைப் பிடித்தபடி மூழ்காமல் இருந்த மனைவி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.