செல்போனை உடைத்த கணவர்; குழந்தைகளை கொன்று தாய் விபரீத முடிவு - ஷாக் பின்னணி!
கணவர் செல்போனை உடைத்ததால் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபரீத முடிவு
விழுப்புரம், விக்கிரவாண்டியில் வசித்து வரும் கோபிநாத் (35) ,பென்னரசி(29) என்ற தம்பதி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு கிருத்திகா(7) என்ற மகளும், மோனிஷ்(4) என்ற மகனும் இருந்துள்ளனர்.
இந்நிலையில், கோபிநாத் குடும்பத்துடன் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு சென்றுள்ளார். அங்கு பிரார்த்தனை முடிந்ததும் மனைவி குழந்தைகளை பஸ்சில் ஏற்றி அனுப்பிவைத்த பின் அவர் வேலைக்கு சென்றுள்ளார்.
வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கோபிநாத் வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காதாதல் பதறிய அவர் உறவினர்களின் உதவியுடன் உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
ஷாக் பின்னணி
அங்கு பென்னரசி, கிருத்திகா, மோனிஷ் ஆகியோர் தனித்தனி துப்பட்டாவில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தை குறித்து நடத்திய விசாரனையில், பென்னரசி அவரது பெற்றோர் மற்றும் சிலருடன் தொடர்ந்து செல்போனில் பேசியதால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு கோபிநாத், அந்த செல்போனை உடைத்துள்ளார்.
இதன் காரணமாக பென்னரசி 2 குழந்தைகளையும் தனித்தனி துப்பட்டாவால் தூக்கிட்டு கொலை செய்து விட்டு, தானும் மற்றொரு துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.