நிலாவில் நிலம் வாங்கி காதல் மனைவிக்கு பரிசளித்த கணவன் - அடடே சம்பவம்!
நிலாவில் இடம் வாங்கி கணவன், மனைவிக்கு பரிசளித்துள்ளார்.
நிலவில் நிலம்
மேற்கு வங்கம், ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் மஹாட்டோ. வர் நீண்ட நாள் காதலித்து தனது மனைவியை கடந்த ஏப்ரலில் கரம் பிடித்துள்ளார். அப்போது, நிலவை மனைவிக்கு பரிசளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாக்குறுதியை காப்பாற்றும் வண்ணம் நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை ரூ.10,000 வாங்கி தனது மனைவிக்கு பிறந்தநாள் பரிசு அளித்துள்ளார்.
மனைவிக்கு பரிசு
இதுகுறித்து கணவர் தெரிவிக்கையில், என் மனைவியை நீண்ட நாட்கள் காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு முன் நிலவை கொண்டு வருவதாக தெரிவித்திருந்தேன்.
இதனால் திருமணத்திற்கு பின் வந்த அவரின் முதல் பிறந்த நாளில் அவருக்கு நிலவில் இடம் வாங்கி பரிசளிக்க திட்டமிட்டேன். நண்பர் உதவுயுடன் லூனா சொசைட்டி இண்டர் நேஷனல் நிறுவனம் மூலம் நிலவில் நிலம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்ற பிறகு, தன்னால் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியை செய்துகாட்ட முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததாகவும் கூறியுள்ளார்.