திருமணமான மறுநாளே விவாகரத்து செய்த மணப்பெண் - என்ன நடந்தது தெரியுமா?

husbandappliedcake
By Petchi Avudaiappan Jan 19, 2022 11:19 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

திருமணமான ஒரே நாளில் கணவனை மனைவி விவாகரத்து செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.

திருமணம் அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வு. இல்வாழ்க்கையை தொடங்கும் முதல் நாள் இவ்வளவு முக்கியமான நாளாக இருக்க வேண்டிய நிலையில் மணமக்களுக்கு திருமண நாளே கடைசி நாளாக இருந்தால் எப்படி இருக்கும்?

அதன்படி பெண் ஒருவர் திருமண விழாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான சம்பவத்தை குறிப்பிட்டு திருமணமான அன்றே தன் கணவரை விவகாரத்து செய்த சம்பவத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

திருமண விழாவில் கேக் வெட்டுவது என்பது ஒரு சாதாரண விஷயம் தான். இப்படியாக கேக் வெட்டும் போது மாப்பிள்ளை பெண் மீது கேக் அப்புவது என்பது நம்மூரில் செய்யப்படும் நடவடிக்கை. இப்படி செய்ததற்காக தான் ஒருவர் விவகரத்து செய்துள்ளார். அந்த பெண் தனது திருமண விழாவின் போது தன முகத்தில் கேக்கை பூச வேண்டாம் என தன் கணவரிடம் கூறியுள்ளார்.

ஆனால் கணவர் அனைவரது முன்னிலையிலும் திருமணமேடையில் கேக் வெட்டும் போது மனைவியின் பின்னங்கழுத்தை பிடித்து கேக் மீது முட்ட வைத்துள்ளார். இதனால் அவர் முகம் முழுவதும்கேக் ஆகியுள்ளது. இதனால் மணப்பெண் கடுப்பாகி அங்கிருந்து சென்றுவிட்டார் பின்னர் உறவினர்கள் பேச்சுவர்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் பேச்சுவார்த்தை சுமூகமாக செல்லவில்லை இதனால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.