கணவனுடனான தகராறில் மனைவி எடுத்த விபரீத முடிவு - தேனியில் நடந்த துயர சம்பவம்
தேனியில் கணவனுடனான குடும்பத் தகராறில் 100 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தைச் சேர்ந்த காட்டுராஜா- மலர்க்கொடி தம்பதியினருக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி மலர்கொடி ஊரின் அருகிலிருந்த 100 அடி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து காலையில் எழுந்த காட்டுராஜா, மலர்கொடியை பல இடங்களில் தேடியும் காணததால் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.அப்போது அங்கிருந்த 100 அடி கிணற்றுக்குள் உடல் ஒன்று மிதப்பதாக காட்டுராஜாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காட்டு ராஜா போடி தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் போடி தீயணைப்புத் துறையினர் 100 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்து மலர் கொடியின் உடலை சடலமாக மீட்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போடி தாலூகா காவல் துறையினர், பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.