அவமானப்படுத்தப்பட்டாரா நயன்தாரா? கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

Nayanthara Samantha
By Thahir Jul 25, 2022 09:28 AM GMT
Report

காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் நயன்தாரா குறித்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காபி வித் கரண் நிகழ்ச்சி 

அண்மையில் நடிகை சமந்தா, பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜோஹர் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சமந்தாவிடம் ஜோஹர் கணவர் என்று குறிப்பிடவே நடிகை சமந்தா அவர் முன்னாள் கணவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவமானப்படுத்தப்பட்டாரா நயன்தாரா? கொந்தளிக்கும் ரசிகர்கள்..! | Humiliated Nayanthara Fierce Fans

பின்னர் தனது விவாகரத்து பற்றி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜோஹரிடம் சமந்தா கேமராவிற்கு பின் விவரித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

கொந்தளிக்கும் நயன்தாரா ரசிகர்கள் 

பின்னர் கரண் ஜோஹர் சமந்தாவிடம், தென்னிந்திய சினிமாவில் யார் முன்னணி நடிகை? என நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதலளித்த சமந்தா, இப்போது தான் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தேன் என்று கூறினார். மேலும் இந்த பதில் மூலம் அவர் நயன்தாரா தான் முன்னணி நடிகை என்று குறிப்பிட்டார்.

அவமானப்படுத்தப்பட்டாரா நயன்தாரா? கொந்தளிக்கும் ரசிகர்கள்..! | Humiliated Nayanthara Fierce Fans

அப்போது நடிகை சமந்தா நிகழ்ச்சி தொகுப்பாளரான கரண் ஜோஹர் என் லிஸ்டில் அப்படி இல்லையே? என்று கூறிவிட்டு ஓர்மேக்ஸ் மீடியா கருத்துக்கணிப்பில் சமந்தாதான் நம்பர் ஒன் நடிகை என்று இருப்பதைக் குறிப்பிட்டார்.

இதையடுத்து நயன்தாராவின் ரசிகர்கள் கரண் ஜேகாரை கடுமையாக சமூக வளைத்தலத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர்.