கடலிலேயே பிறந்து கடலிலேயே வாழுந்து மடியும் மனிதர்கள் - யார் இவர்கள்?
கடலிலேயே பிறந்து, வாழ்ந்து, இறந்து வரும் இனக்குழு ஒன்று உள்ளது.
பாஜாவோ இனம்
மலேசியா, இந்தோனேசியா, ப்ரூனே இடையே கடல் பகுதி ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஒரு பழங்குடி இனம் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை பாஜாவோ இனம் என அழைக்கின்றனர். கடலில் பிறந்து, அங்கேயே வாழ்ந்து மடிந்தும் போகின்றனர்.
இவர்கள் நிலத்தில் கால் வைப்பதையே அரிதாகத்தான் பார்க்க முடியுமாம். படகுகள், கடலில் அமைக்கப்படும் மர வீடுகள் என வசித்து வருகின்றனர்.
கடல் இனக்குழு
மேலும், அன்றாட உணவாகவும் கடல் உயிரினங்களான மீன், ஆக்டோபஸ், இறால், நண்டு போன்றவற்றை உண்கின்றனர். மேற்கு இந்தோனேசிய தீவுகளான மாலுகு, ராஜா அம்பட், சுலாவ்சி ஆகியவற்றிற்கு இடையே உள்ள கடல் பகுதியில் வசிக்கும்
இவர்கள் படகை தான் போக்குவரத்து சாதனமாக உபயோகிக்கின்றனர். மற்றவர்களை போல நீண்ட நேரம் நீருக்கடியில் இருப்பதற்கு இவர்களுக்கு உபகரணம் எதுவும் தேவைப்படுவதில்லை.
அந்த அளவுக்கு கடலோடு ஒன்றி வாழ்ந்து வருகின்றனர்.
மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் என பல நாடுகள் அருகில் இருந்தாலும் இவர்களை தங்கள் நாட்டு குடிமக்களாக எந்த நாடும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.