சீமான் அம்மா ஒரு மலையாளி.. சுபவீ ஒரு பிச்சைக்காரன் : கொந்தளித்த எச். ராஜா
திரௌபதி படத்தை இயக்கிய இயக்குனர் ஜி. மோகன் ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப்படத்தின் சிறப்பு காட்சியை தமிழக பாஜக சார்பில் எச். ராஜா, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் , வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் படத்தை பார்த்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, உண்மையான ருத்ர தாண்டவத்தை பார்த்தேன். பிசிஆர் சட்டத்தை தோலுரித்து காட்டியிருக்கிறது ருத்ர தாண்டவம் என்றார்.
இது படம் வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டும் கொண்ட படமல்ல. அசோகப் பேரரசினை காட்டிலும் மிகப்பெரிய பேரரசை ஆண்ட ராஜராஜ சோழனை இழிவுபடுத்திய ரஞ்சித் போன்றவர்களும் இந்த சினிமாவில்தான் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு ஜி.மோகனின் பெருமைகளை சொன்னார்.
[AB6DGK ]
மேலும், என்னிடம் கேள்வி கேட்கும் பலருக்கு தமிழ் சரியாக உச்சரிக்க கூட முடியவில்லை. அப்படிப்பட்டவர்கள்தான் என்னைக் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் தமிழ் ஆர்வலர்கள் என கூறிக் கொள்கிறார்கள் என்றார்.
இந்து மதம் இல்லாமல் தமிழ் இல்லை என்று சொன்ன ராஜா, சீமான் தமிழரா? சீமான் அம்மா தமிழச்சியா? அவர் மலையாளி. ஆனால் என்னை பிஹாரி என்கிறான் ஒரு முட்டாள்.
நான் பச்சை தஞ்சாவூரான். ஆரியம் பற்றி பேசும் சுபவீயின் மூளை குப்பை தொட்டி ஆகிவிட்டது . அறிவாலயம் வாசலில் நிற்கும் பிச்சைக்காரன் என்று கடுமையாக கொந்தளித்தார்.