அண்ணாமலை மனுவை தெருவில் போட்டாரா?- செவுல திருப்பிடுவன் - ஆவேசமான ஹெச். ராஜா

Tamil nadu BJP K. Annamalai H Raja
By Karthick Aug 07, 2023 06:05 AM GMT
Report

அண்ணாமலை மனுவை கீழே போட்டாரா என செய்தியாளர் கேள்வி கேட்க, பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா ஆவேசமடைந்துள்ளார்.

தெருவில் கிடந்த மனு 

பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை சில தினங்கள் முன்பு திருவாரூர் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது ரமா என்ற மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த பெண்மணி புகார் மனு ஒன்றை நேரில் சென்று அவரிடம் அளித்தார்.

hraja-angry-about-annamalai-question

அப்போது அந்த மனுவை பெற்றுக்கொண்ட அண்ணாமலை, நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியதாக கூறப்படும் நிலையில், அந்த மனு சில மணி நேரங்களிலேயே தெருவில் கிடந்ததாக ரமா பேட்டியளித்தார்.

ஆவேசமான ஹெச் ராஜா

அந்த செய்தி வைரலான நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச் ராஜாவிடம் இது குறித்து செய்தியாளர்களை கேள்வி எழுப்பினர். இந்த கேள்வியினால் ஆவேசமான ஹெச் ராஜா,"இதை சொன்னானோ அந்த பயலை இங்க கூட்டிட்டு வாங்க.. செவுல திரும்ப கொடுப்பேன் என்றார்.

hraja-angry-about-annamalai-question

ஏனென்றால் தான் 4 நாள்கள் அண்ணாமலையுடன் பாதயாத்திரை சென்றேன். மனுக்களை தனது செக்யூரிட்டியிடம் கொடுத்து புகார் பெட்டியில் அண்ணாமலை போட சொன்னார். ஆகவே இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க" என அவர் கூறினார்.