தமிழ்நாட்டின் கூட்டணி கணக்கு என்னவாக இருக்கும்...? திமுக கூட்டணியில் சிக்கல் ஏற்படுமா.?
அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில், தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கணக்கு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்து வருகின்றன.
சூடுபிடிக்கும் நாடாளுமன்ற களம்
வரும் 2024-ஆம் தேர்தலில் தமிழகத்தில் கணிசமான வாக்குகளையும், சில குறிப்பிட்ட தொகுதிகளில் தங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அனுப்பும் நோக்கில் பாஜக முயற்சிகளை செய்து வந்த நிலையில், மாநில கட்சி தலைமைக்கும் அதிமுகவிற்கும் பெரும் மனக்கசப்புகள் ஏற்பட அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் தனி தனி கூட்டணிகள் உருவாகவுள்ளன.
அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு எந்தெந்த கட்சிகள் செல்லும் என்ற கேள்விகள் தற்போது அதிகரித்துள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்று கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்றாலும், 39 இடங்களை மட்டும் தமிழகத்தில் இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தற்போது சலசலப்புகள் தான். அதிமுகவுடன் கூட்டணிக்கு சிறு கட்சிகள் தயங்கியதற்கு பாஜகவின் மதவாத அரசியலே காரணம் எனலாம்.
ஆனால் தற்போது அது மாறியுள்ளது. அதன் காரணமாக திமுக கூட்டணியில் சில கட்சிகள் அதிக இடங்களை கேட்டு பெறலாம் என்றும் அவ்வாறு தொகுதி பங்கீடு சரியான அமையவில்லை என்றால் அவர்கள் அதிமுக பக்கம் சென்றாலும் அதில் பெரிய அதிர்ச்சி இருக்காது.
இது திமுகவிற்கு தெரியும் எனலாம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்ற கூற்று படி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அமமுக, ஓபிஎஸ் ஆதரவு அணி போன்றவற்றை தவிர்த்து மற்ற கட்சிகளும் பாஜகவை விட்டு அதிமுக கூட்டணிக்கு வரலாம்.
இதில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் நிற்கப்போகிறது என்பது தெரிந்த நிலையில், ஆனாலும் அரசியல் வல்லுநர்கள் சிலர் தேர்தல் நேரத்தில் என்னவேண்டுமானாலும் நடைபெறலாம் என கூறுகின்றனர். எது எப்படியோ இன்னும் 6 மாதங்கள் கிட்டத்தட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கு இருக்கும் சூழலில் கூட்டணி குறித்தான அடுத்தடுத்த மாற்றங்கள் வரலாம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.