இது எத்தனையாவது ரெய்டு ஞாபகமில்லைப்பா : கார்த்தி சிதம்பரம் கிண்டல்
முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரத்திற்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
2010 - 14 ல் சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 260 விசாக்கள் வழங்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
I have lost count, how many times has it been? Must be a record.
— Karti P Chidambaram (@KartiPC) May 17, 2022
ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு சோதனை செய்து வருகிறது.
டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட 11 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இதுவரை எத்தனை முறை சோதனை நடைபெற்றது என்ற கணக்கு நினைவில் இல்லை என சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெறும் நிலையில் கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்