9 மணி நேரம்..செந்தில் பாலாஜியிடம் எப்படி நடந்தது விசாரணை..வெளிவந்த தகவல்!

V. Senthil Balaji DMK Enforcement Directorate
By Karthick Aug 10, 2023 04:34 AM GMT
Report

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த விசாரணை எவ்வாறு நடைபெற்றது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அமலாக்கத்துறை விசாரணை  

அமலாக்கத்துறையின் விசாரணை பிடியில் இருக்கும் செந்தில் பாலாஜி எந்த வித இடர்பாடும் இல்லாமல், விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக தகவல் வெளியாகின. ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கு மேலாக நடைபெறும் விசாரணையில் தற்போது அவரிடம் எந்த வகையில் விசாரணை நடைப்பெற்றதாக தகவல் வெளிவந்துள்ளது.

how-ed-enquired-senthil-balaji

ஆம், இல்லை கேள்வி  

2015-ஆம் ஆண்டு புகார், கரூர் byepass வீடு, போன்றவற்றில் அமலாக்கத்துறை கைப்பற்றிய ஆவணங்களை வைத்து, செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

how-ed-enquired-senthil-balaji

கடந்த மூன்று நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள், வழக்கில் ஆம், இல்லை என்ற பதில் அளிக்கும் வகையிலான கேள்விகளை கேட்டுள்ளனர். இரண்டில் ஒரு பதிலை மட்டுமே செந்தில் பாலாஜி கூறும் வகையில் இந்த விசாரணை நடைபெற்றதாகவும் தகவல் வெளிவந்துள்ளன.   

3 நாட்களை தொடர்ந்து இன்று நான்காவது நாளாக விசாரணை தொடரவுள்ளது. அதற்கிடையில் தான் செந்தில் பாலாஜியின் தம்பி அஷோக்குமாரின் மனைவி நிர்மலா, நேரில் ஆஜராகும்ப்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.