வெறும் 6 நிமிஷம் பாத்ரூம் பயன்படுத்த 800 ரூபாய் கட்டணம் - ஆன்மிக பயணத்தில் துயரம்

Rajasthan Viral Photos
By Sumathi Apr 29, 2025 07:09 AM GMT
Report

கோவிலுக்கு குடும்பத்துடன் வந்த பெண்ணுக்கு நடந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

கழிவறை கட்டணம்

ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தில் கது ஷ்யாம் என்னும் பிரசித்தி பெற்ற கோவில் உள்ளது. இங்கு பெண் ஒருவர் தன் கணவர், மகள்களுடன் வழிபாடு செய்ய தரிசன வரிசையில் காத்திருந்துள்ளனர்.

rajasthan

அப்போது வயதான பெண்மணிக்குக் கடுமையான குமட்டல் ஏற்பட்டதால், கழிவறையை தேடியுள்ளனர். ருகிலுள்ள ஒரு ஹோட்டலை அணுகியுள்ளனர். ஆனால் அங்கு ஒரு சில நிமிடம் கழிப்பறை பயன்படுத்துவதற்கே ரூ.800க்கு மேல் ஹோட்டல் வரவேற்பாளர் கட்டணம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது மகள் கூறுகையில், "நாங்கள் காத்திருந்தபோது, ​​என் அம்மாவுக்கு திடீரென்று உடல்நிலை மிகவும் மோசமாகத் தொடங்கியது. குமட்டல், வயிற்று வலி மற்றும் வாந்தி எடுக்க வேண்டும் என்ற வலுவான உந்துதல். அப்பா கழிப்பறைக்காகச் சுற்றிப் பார்த்தார். நாங்கள் அம்மாவைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, ஆனால் பயன்படுத்தக்கூடிய எதுவும் இல்லை.

மாறப்போகும் ஏடிஎம் புதிய விதிகள் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

மாறப்போகும் ஏடிஎம் புதிய விதிகள் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

வைரல் பதிவு

சுமார் 1 கி.மீ. தொலைவில் கோவில் பகுதிக்கு அருகில் கழிப்பறை இல்லை. சில பொது குளியல் பகுதிகள் உள்ளன, ஆனால் சரியான கழிப்பறைகள் இல்லை. அவரால் நிற்கக்கூட முடியவில்லை. நாங்கள் அருகிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு விரைந்து சென்று வரவேற்பறையில் இருந்த நபரிடம் கெஞ்சினோம். எங்களுக்கு அறை தேவையில்லை. கழிப்பறை மட்டும் 5-10 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வெறும் 6 நிமிஷம் பாத்ரூம் பயன்படுத்த 800 ரூபாய் கட்டணம் - ஆன்மிக பயணத்தில் துயரம் | Hotel Charged 805 Woman Using Restroom Rajasthan

அவர் என் அம்மாவின் நிலையைப் பார்த்து.. கழிப்பறையைப் பயன்படுத்த ரூ.800 கட்டணம் என்றார். நாங்கள் அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அவர் அவதியில் இருக்கும் பெண்ணுக்கு எந்த அனுதாபமும் காட்டவில்லை. எந்த தயக்கமும் இன்றி கட்டணம் வசூலிப்பதில் முனைப்புடன் இருந்தார்.

நான் இன்னும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.. ஒரு பெண் வலியில் இருப்பதைப் பார்த்துவிட்டு, அடிப்படை மனிதநேயத்திற்கு எப்படி விலை கொடுக்க முடியும்? நாம் என்ன ஆகிவிட்டோம்? என தனது LinkedIn பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.