தாய் என நினைத்து பேருந்துடன் ஓடிய குதிரை..ஓர் ருசிகர சம்பவம்!
ஒரிஜினல் குதிரையை போன்று ஓடும் பஸ்சில் வரைந்த ஓவியத்தை பார்த்து ஓடும் குதிரையின் வீடியோ வைரலாகி வருகிறது.
குதிரையின் ஓவியம்
கோவை நகர பகுதியில் இருந்து சுற்றுப்புற பகுதிகளுக்கு சென்று வரும் ஏராளமான தனியார் பேருந்துகள் உள்ளது. அதில் ஒரு பேருந்தில் பக்கவாட்டில் ஓடும் குதிரையின் ஓவியம் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நேற்று கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் அருகே வந்து நின்றது. அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு குதிரை அந்த பேருந்தில் வரைந்துள்ள குதிரை ஓவியத்தை பார்த்து ஓடிவந்து பார்த்தது.
வைரலாகும் வீடியோ
அந்த ஓவியக்குதிரையின் முகத்தோடு முகம் பதித்து கொஞ்சுவதுபோல் காணப்பட்டது. இதனை அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்து வியந்தனர். இந்நிலையில் அந்த பேருந்து அங்கிருந்து கிளம்பியபோது, அந்த குதிரையும்
பேருந்தில் குதிரை ஒவியத்தை பார்த்தவுடன் பீலிங் ஆன குட்டிக் குதிரை. #kovai pic.twitter.com/Ck8ja3a641
— கார்த்திக் சதிஸ்குமார் (@kovaikarthee) September 12, 2022
அந்த பேருந்தின் பின்னாடியே ஓடியதை சாலையில் சென்றவர்களும், பேருந்தில் இருந்த பயணிகளும் ஆர்வமுடன் பார்த்தனர். மேலும் அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.