சர்க்கரை நோய் குறையவில்லையா கவலை வேண்டாம்...இந்த பொடியை சாப்பிடுங்க..!

SugarPatient நீரிழிவுநோய் உடல்ஆரோக்கியம் சர்க்கரைஅளவு HomemadePowder ControlDiabetes சர்க்கரை
By Thahir Mar 24, 2022 12:05 AM GMT
Report
155 Shares

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக உலகளவில் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்படுவோர்களில் இந்தியர்கள் தான் அதிகம் என்கிறது ஆய்வு.

சிறுவயது பிள்ளைகளுக்கு இன்சுலின் சுரப்பு குறைந்து அடியோடு நிற்பது டைப் 1 என்றும், பெரியவர்களுக்கு இன்சுலின் சுரப்பு குறைவால் உண்டாகும் சர்க்கரை நோய் டைப் 2 என்றும் அழைக்கப்படுகிறது. சர்க்கரை நோய்யை கட்டுக்குள் வைக்க உதவும் சில டிப்ஸ்களை தற்போது பார்க்கலாம்.

கருஞ்சீரகப் பொடி

கருஞ்சீரக விதையில் இருக்கும் தைமோகுயினன் என்னும் நோ எதிர்ப்பு சக்தி தரும் வேதிப்பொருள் வேறு எதிலும் இல்லை.

சர்க்கரை நோய் குறையவில்லையா கவலை வேண்டாம்...இந்த பொடியை சாப்பிடுங்க..! | Homemade Powder To Control Diabetes

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் கருஞ்சீரகத்தை கொண்டு அதை கட்டுப்படுத்தலாம். இவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு கணையத்தில் இன்சுலின் சுரப்பையும் மேம்படுத்துகிறது.

கருஞ்சீரகத்தை இலேசாக வாசம் போக அரைத்து வைத்துகொண்டு, அதை வெதுவெதுப்பான நீரில் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் கட்டுப்படாத ரத்த சர்க்கரை அளவு பெருமளவு குறையும்.

இதை எடுத்துகொள்வதற்கு முன்பு ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்வது அவசியம். பிறகும் இதை தொடர்ந்து சாப்பிடாமல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு ஒரு மாத இடைவெளியில் மீண்டும் சர்க்கரை பரிசோதனை செய்யவேண்டும்.

தொடர்ந்து ரத்த சர்க்கரை கட்டுக்குள் இல்லாமல் இருந்தால் அவர்கள் கருஞ்சீரக பொடியை சாப்பிட்டதும் பிறகு பரிசோதனை செய்து அதற்கேற்ப இடைவெளிவிட்டு எடுத்துகொள்ளலாம்.

சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை தொடர்ந்து எடுத்துகொண்டால் திடீரென்று ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துவிடவும் வாய்ப்புண்டு என்பதால் கவனம் தேவை.

வெந்தயப்பொடி

ஆரம்பகட்டம் முதலே வெந்தயத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோய் வராமலே தவிர்க்க முடியும். வெந்தயம் கணையத்தில் இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது.

சர்க்கரை நோய் குறையவில்லையா கவலை வேண்டாம்...இந்த பொடியை சாப்பிடுங்க..! | Homemade Powder To Control Diabetes

குடலானது ரத்தத்தில் சர்க்கரை அளவை உறிஞ்சுவதையும் குறைக்க செய்கிறது. அதனால் தான் நீரிழிவு வருவதற்கான அறிகுறி பரிசோதனையில் தெரிந்தால் சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க இந்த வெந்தயம் உதவும் என்கிறது இயற்கை மருத்துவம்.

வெந்தயத்தை இலேசாக வறுத்து பொடித்து வைத்து தினமும் காலையில் வெந்தய டீயாக குடித்துவரலாம். கசப்பு சுவை இருக்கும் என்றாலும் தினமும் ஒரு கப் அளவு குடித்துவந்தால் போதுமானது. வெந்தயத்தை முளைகட்டியும் தினம் ஒரு டீஸ்பூன் வீதம் எடுத்துகொள்ளலாம்.

வெந்தயம் சாப்பிடும் போதும் பரிசோதனை அவசியம். சர்க்கரையை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர உதவும் வெந்தயம் சர்க்கரையின் அளவை குறைத்துவிடவும் கூடும் என்பதால் அவ்வபோது பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.