மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழப்பு - கனமழையால் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை

Mumbai Death Weather
By Thahir Jul 27, 2023 04:06 AM GMT
Report

கனமழை காரணமாக மும்பையில், பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை

மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையல் மகாராஷ்டிராவில் மிக கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக மும்பையில் அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Holidays for schools and colleges in Mumbai

ஏற்கனவே டெல்லி, தெலுங்கானா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் சந்திராபூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.