கனமழை எதிரொலி; பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை

Tamil nadu
By Thahir Feb 02, 2023 03:01 AM GMT
Report

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளி,கல்லுாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

கனமழை எதிரொலி 

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் படி இன்று பல்வேறு இடங்களில் மழை கொட்டி வருகிறது.

அந்த வகையில், நாகை மாவட்டம் வேதாரண்யம், கீழ்வேளூரில் காலை முதல் 2 முதல் 3 செண்டி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. கனமழை தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Holidays for schools and colleges

பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை 

சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு நாகை மாவட்ட ஆட்சியர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (பிப்ரவரி 2) விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலும் அதிகாலை முதலே கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (பிப்ரவரி 2) விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.