கனமழை காரணமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
Tamil nadu
By Thahir
கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தேனி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.