கனமழை காரணமாக துாத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Tamil nadu
By Thahir Nov 29, 2022 04:32 AM GMT
Report

கனமழை காரணமாக துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.இதையடுத்து துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக துாத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை | Holiday Only For Schools In Tuticorin District

கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கும், தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையானது அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.