கனமழையால் 4 மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Tamil nadu
By Thahir
கனமழையால் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாட்டங்களில் இன்று கனமழை பெய்து வருவதால் மேற்கண்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.