ஹாக்கி போட்டி - நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டிகளின் குரூப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது.
லீக் சுற்றில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. இந்திய அணி மன்பிரீத் சிங் தலைமையில் களமிறங்கியது. போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கியது.
போட்டி தொடங்கிய 6 வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ரசல் முதல் கோல் அடித்தார். இதனை தொடர்ந்து ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ருபிந்தர் பால் சிங் முதல் கோல் அடித்தார்.
இதனால், ஆட்டத்தின் முதல் பகுதியில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. ஆனால், இரு அணிகளும் சிறப்பான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், 4-வது பகுதியில் எந்த வீரர்கள் கோல் அடிக்கவில்லை. இந்தியா 3 கோல்கள், நியூசிலாந்து அணி 2 கோல்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், நியூசிலாந்தை 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி பெற்றது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். லீக் சுற்றில் இந்திய அணி நாளை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.