பாகிஸ்தானில் இந்து கோவில் மீது சரமாரி தாக்குதல் - வைரலாகும் வீடியோ
பாகிஸ்தானில் இந்து கோவில் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ரஹிம் யார்கான் மாவட்டத்தில் உள்ள இந்து கோவிலை அடித்து நொறுக்கிய சிலர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கு காரணம் சில தினங்களுக்கு முன் மதராசா நூலகத்தில் மத புதத்தங்களை வைத்திருந்த கம்பளத்தின் மீது வேண்டுமென்றே சிறுவன் ஒருவன் சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து 8 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சிலர் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
You are free to go you temple? Watch this brazen attack on a temple in the broad daylight.
— Kapil Dev (@KDSindhi) August 4, 2021
Another bad day for #Hindus as Ganesh #Temple in Bhong city of Rahimyar Khan was attacked by miscreants. The beasts daringly live telecast the attack on Facebook: https://t.co/uVq8UYBkQB pic.twitter.com/SzGrtIxEzk
பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது வழக்கம். ஆனால் அதற்கு நிகராக குற்றம் செய்த சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை சபாஸ் கில் என்பவர் தனது ட்டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து தகவல் கிடைத்ததும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் போலீசார் அங்கு வருவதற்குள் இந்து கோவிலை அவர்கள் சிலர் அடித்து நொறுக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.