இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம்..இந்தியை அல்ல - உதயநிதி விளக்கம்
அமீர் கான் நடித்துள்ள "லால் சிங் சத்தா" என்ற இந்தி திரைப்படத்தை தமிழில் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
திமுகவின் இளைஞரணி செயலாளர் மற்றும் எம்.எல்.ஏவாக உள்ள உதயநிதி ஸ்டாலின் தற்போது ஆமீர்கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' என்ற திரைப்படத்தின் உரிமையை பெற்று தமிழகத்தில் வெளியிட உள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஹாலிவுட்டில் 1994 ஆம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமே லால் சிங் சத்தா.
ரெட் ஜெயண்ட் மூவிஸ்
இதில் பாலிவுட் நடிகர் அமீர் கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தமிழ்நாட்டில் வெளியிட உள்ளார்.
தமிழகத்தில் எப்போதும் திமுக இந்தி எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் தற்போது அக்கட்சியின் எம்எல்ஏவாக உள்ள உதயநிதி இந்தி படத்தை வெளியிட இருப்பதால் இந்த விஷயம் சர்ச்சையாகி உள்ளது.
இந்தி திணிப்பு
அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி, "எப்போதும் 'இந்தி தெரியாது போடா' என்பது இந்தி திணிப்புக்கு எதிரானது தான்... நீங்கள் இந்தியை கற்றுக்கொண்டே தான் ஆக வேண்டும் என்று யாராவது திணித்தால் அதை எதிர்க்க வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை.
ஆனால் மொழியை கற்றுக்கொள்வது என்பது அவர்களின் விருப்பம் என்று கூறினார். மேலும் இது ரெட் ஜெயண்டின் முதல் இந்தி படம் என்றும் தெரிவித்தார். இவரின் இந்த செயல் தற்போது சர்ச்சையாகி அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.