புரட்டிப்போட்ட வெள்ளம்; ஒரே நொடி பல வீடு காலி - திடுக்கிடும் வீடியோ!
கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை
இமாச்சலபிரதேசத்தில் பருவமழை பெய்து வருகிறது. 12 மாவட்டங்களில் கனமழை கொட்டிட வண்னம் உள்ளது. தொடர்ந்து, சுற்றுலா மையங்களான குலு, மணாலி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையுடன் நிலச்சரிவும் ஏற்பட்டது.
இதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு அந்த மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 765 சாலைகள் சேதமடைந்துள்ளன. உணவகங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. 30 வீடுகள் முழுமையாக உடைந்து விழுந்தன.
வெள்ளப்பெருக்கு
17 இடங்களில் திடீர் வெள்ளப் பெருக்கு என மக்கள் அவதியுற்று வருகின்றனர். மேலும், சோலனில் ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. கல்கா-சிம்லா நெடுஞ்சாலையில் சன்வாரா பகுதியில் மண் சரிவால் போக்குவரத்தில் அபாயம் நிலவி வருகிறது.
மருத்துவ உதவி தேவைப்படுவோரை ஏணிகள், கயிறுகளின் உதவியுடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
Seen a video also attached where Beas is flowing all its level up and has destroyed many house at #HimachalPradesh, but one of the temple in Mandi district at #Himachal is at its position. This is what our ancient architecture is.#Heavyrainfall #HimachalFloods #Himachalrain pic.twitter.com/7hEd03v5G8
— BeCognizance (@BeCognizance) July 11, 2023
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவாக 24 மணி நேரத்தில், 13 புள்ளி 5 சென்டிமீட்டர் கனமழை பெய்துள்ளது.
துனாக் பகுதியில் காட்டாற்று வெள்ளம் குடியிருப்புகளை நொடியில் தகர்த்துச்சென்ற பதை பதைக்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.