இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் - மக்கள் அலறி ஓட்டம்

Earthquake
By Nandhini May 13, 2022 05:43 AM GMT
Report

இன்று அதிகாலை 3 மணியளவில் இமாச்சலப்பிரதேசம், தரம்சாலாவிலிருந்து 57 கி.மீ. தொலைவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் கங்ரா மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோளில் 3.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பெரிதும் அச்சமடைந்தனர்.

கட்டிடங்கள் சற்று அதிர்ந்ததால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான உயிர் சேதமோ, பொருட்கள் சேதமோ ஏற்படவில்லை. 

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் - மக்கள் அலறி ஓட்டம் | Himachal Pradesh Earthquake