ஹிஜாப் விவகாரம் - ‘நீங்கள் முதுகெலும்பில்லாத கூட்டத்தினைச் சேர்ந்தவர்’ - நடிகை குஷ்பு கொந்தளிப்பு
கர்நாடகாவில் நடந்து வரும ஹிஜாப் விவகாரத்தையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த பெண்ணிடம் கூச்சலிட்ட மாணவர்களின் வீடியோ இடம்பெற்றது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்தக் கொடுமையை கண்ட பிறகும் உங்களது கள்ளமவுனமும் சுயநலமும் அமைதி காக்கச்சொல்கிறதா? இதே தாக்குதலும், அச்சுறுத்தலும் சங் பரிவாரக்கும்பலால் நாளை உங்களது இரு பெண் குழந்தைகளுக்கும் ஏற்படாது என்று நம்புகிறீர்களா குஷ்பு மேடம்?" என்று கேட்டு பதிவிட்டிருந்தார்.
இது குறித்து பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், "2005ம் ஆண்டு என்னுடைய 5 வயது மகள் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க கூட விடாமல் என்னுடைய வீட்டினைச் சூழ்ந்துகொண்டு போராட்டம் நடத்தினீர்கள். அப்போது நான் எந்த சங்க பரிவார உறுப்பினரையும் பார்க்கவில்லை. நீங்கள் முதுகெலும்பில்லாத கூட்டத்தினைச் சேர்ந்தவர்" என்று பதிவிட்டுள்ளார்.
குஷ்பூவின் இந்த டுவிட்டர் பதிலுக்கு, நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பதிவிட்டு வருகிறார்கள்.
When u n ur party didn’t allow me to take my 5yr old daughter to hospital when she was battling dengue in 2005 by sorrounding my home n holding me hostage, I didn’t see any sangh parivaar there, It was u n ur pack of coward spineless thugs. I am yet to see more thugs like you. https://t.co/0sOFUkzvCK
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 10, 2022