கணவரை குடிக்காரர், பெண்மோகம் கொண்டவர் என்று கூறுவது சித்ரவதைக்கு சமம் - மும்பை உயர்நீதிமன்றம்

India
By Nandhini Oct 26, 2022 04:33 PM GMT
Report

கணவரை குடிக்காரர், பெண்மோகம் கொண்டவர் என்று கூறுவது சித்ரவதைக்கு சமம் என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சித்ரவதைக்கு சமம் - மும்பை உயர்நீதிமன்றம்

கடந்த 2005ம் ஆண்டு விவாகரத்து வழங்கியதற்கு எதிராக ராணுவ வீரரின் மனைவி மேல்முறையீட்டு மனு ஒன்றை தொடர்ந்தார். 

அந்த மேல்முறையீட்டு மனுவில், தன் கணவர் மீது குற்றம் சாட்டியிருந்த நிலையில், மும்பை நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து மும்பை நீதிமன்றம் தெரிவிக்கையில், கணவரை ஆதாரமின்றி குடிகாரர், பெண்மோகம் கொண்டவர் என்று கூறுவது சித்ரவதைக்கு சமம் என்றும், இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டு, அவரின் நன்மதிப்பை கொடுக்கும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

high-court-of-bombay-india