தாமாக விசாரணையை துவங்கிய உயர்நீதிமன்றம்..மீண்டும் சிக்கலில் அமைச்சர் பொன்முடி

DMK K. Ponmudy Madras High Court
By Karthick Aug 10, 2023 05:16 AM GMT
Report

உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மீதான விசாரணையை தாமாக முன்வந்து துவங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

சொத்துக்குவிப்பு வழக்கு   

தற்போதைய திமுகவின் அமைச்சரவையில் உயர்கல்வி துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் கடந்த திமுக ஆட்சியின் போது, வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 36 லட்ச ரூபாய் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

high-court-enquiring-ponmudi-case

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து, லஞ்சஒழிப்பு துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை விழுப்புர நீதிமன்றத்தில் இருந்து வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வேலூரில் மாவட்ட நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், பொன்முடியை இந்த வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.   

விசாரணையை துவங்கும் உயர்நீதிமன்றம் 

பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் இன்று விசாரணையை துவங்கவுள்ளது.

high-court-enquiring-ponmudi-case

இந்த வழங்கின் விசாரணை இன்று மாலை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெஙகடேஷ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து, விசாரணை நடத்தவுள்ளது தற்போது நீதிமன்ற வளாகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.