தாமிரபரணி ஆற்றின் பெயர் மாற்றம்? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
By Irumporai
தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை நதி என மாற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆறு
தாமிரபரணி ஆற்றின் பெயரை மாற்ற கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்பாட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அதில், தாமிரபரணி எனும் சொல் வடமொழி சொல் எனவும், பொருநை நதி என்ற பெயர் தான் சங்ககால இலக்கியத்தில் உள்ளது.
வழக்கை தள்ளி வைத்த நீதிமன்றம்
ஆதலால் பொருநை நதி என அதன் பெயர் மாற்ற வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து 12 வாரங்களில் உரிய முடிவு எடுத்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டு வழக்கை தள்ளிவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

இந்தியாவில் தேனிலவிற்கு சென்றவேளை கொடூரம் : கூலிப்படையை வைத்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி IBC Tamil

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan
