ஹெலிகாப்டர் விபத்து - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார் ராணுவ தளபதி நரவனே
ராணுவ தளபதி நரவனே மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை அவசரமாக சந்தித்திருக்கிறார். குன்னூரில் ராணுவ ஹெலிஹாப்டர் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட14 பேர் பயணம் மேற்கொண்டனர். இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி பயணம் செய்திருக்கிறார்.
பிபின் ராவத் நிலைமை என்ன என்பது தான் தற்போது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. விமானம் தரையிறங்க 5 நிமிடம் மட்டுமே இருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 13 பேர் தற்போது உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ராணுவ தளபதி நரவனே, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசி இருக்கிறார். அவரிடம், ராணுவ விமானம் விபத்து குறித்து கூடுதல் தகவல்களை தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.