ஹெலிகாப்டர் விபத்து: விமானி இறுதி ஊர்வலத்தில் ராணுவ சீருடையில் கலந்து கொண்ட மனைவி
உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான விமானியின் மனைவி கணவரின் இறுதிச் சடங்கில் ராணுவ சீருடையில் கலந்து கொண்டுள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்து
கேதார்நாத் கோயில் அருகே கௌரிகுண்ட் வனப்பகுதியில் தனியார் நிறுவன விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், 2 வயதுக் குழந்தை உள்பட 5 பக்தர்கள், விமானி, பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் அறக்கட்டளை உறுப்பினர் என 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானத்தை இயக்கிய விமானி ராஜ்வீர் சிங் செளகான், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் ஆவார். கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றிய ராஜ்வீர், கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வுபெற்றுள்ளார்.
கணவர் உயிரிழப்பு
அதன் பின்னர், ஆர்யன் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
அவருடைய மனைவி, தீபிகா செளகான், தற்போது ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 14 ஆண்டுகள் கடந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.
குழந்தைகள் பிறந்ததை கொண்டாடும் வகையில், எதிர்வரும் ஜூன் 30 ஆம் தேதி, பிரம்மாண்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ராஜ்வீர் உயிரிழந்துள்ளார்.
ராணுவ சீருடையில் மனைவி இறுதி ஊர்வலம்
இந்த நிலையில், ராணுவ சீருடையில் கணவரின் இறுதி ஊர்வலத்தில் தீபிகா கலந்து கொண்ட புகைப்படங்க்ள சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும், ராஜஸ்தான் அரசு சார்பில் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளார்.