ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் அரபிக் கடலில் விழுந்து விபத்து - 4 பேர் பலி - அதிர்ச்சி சம்பவம்
அரபி கடலில் ஓஎன்ஜிசி பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது கடலில் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) அரபிக் கடலில் பல எண்ணெய் உற்பத்தி நிலையங்களை கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மும்பையிலிருந்து அரபிக் கடல் வழியாக ஓஎன்ஜிசி பணியாளர்களை பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் ஏற்றிச் சென்றது. மும்பைக்கு மேற்கே உள்ள சாகர் கிரண் என்னும் எண்ணெய் கிணறு அருகே, ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது, இறங்க வேண்டிய இடத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் கடலில் விழுந்தது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்புப்படையினர் சென்று மீட்பு பணிகள் மேற்கொண்டனர். இந்த விபத்தில், 6 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், 4 பேர் பரிதாபகமாக உயிரிழந்துள்ளதாக ஓஎன்ஜிசி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.